நாடளாவிய ரீதியில் கடற்சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சமூகப் பொறுப்போடு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேலியகொடை மீன் சந்தைப் பகுதியில் 20 அம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்று நீக்கிகளைத் தெளித்து சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில், 21 ஆம் திகதி )பேலியாகொடை மீன் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரினால் குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொடர்பான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினரின் புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. மக்களின் அன்றாட உணவுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு, நாடளாவிய ரீதியில் கடற்றொழில் சார் நடவடிக்கைகளைத் தொடர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைவரும் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளிகளைப் பேணி தொழில் செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM