சோமாலியாவின் மொகடிஷுபகுதியில் குடிவரவு மற்றும் இயற்கைமயமாக்கல் சேவையின் தலைவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைநகரில் பரபரப்பான KM4 சந்திக்கு அருகிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குடிவரவு மற்றும் இயற்கைமயமாக்கல் சேவையின் தலைவர் மொஹமட் ஏடன் கோஃபியை இலக்கு வைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக துருக்கிய செய்தி நிறுவனத்திடம் அரசாங்க செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் முக்தார் ஒரோன்ஜோ உறுதிப்படுத்தியுள்ளார்.
தாக்குதலில் இருந்து அவர் தப்பியபோதும், இருவர் உயிரிழந்ததுடன், மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் ஒரோன்ஜோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் சோமாலியை தளமாகக் கொண்ட அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் பயங்கரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM