லண்டனை மையமாகக் கொண்டியங்கும் ஃபினான்ஷியல் டைம்ஸ், பெருமைக்குரிய த பேங்கர் விருது வழங்கி சம்பத் வங்கியை கௌரவித்துள்ளது.
கடந்த ஆண்டில் சவால்கள் மத்தியில் சம்பத் வங்கியின் உறுதியான பெறுபேறுகளை கௌரவிக்கும் வகையில் நான்காவது முறையாக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வங்கித் துறையில் ஒஸ்கார் விருதாக கருதப்படும் த பேங்கர் விருது, நுணுக்கமான இடர் கையாளல், வலிமையான நிர்வாக மற்றும் சிறந்த வங்கிச் செயற்பாடுகள் ஆகியவற்றை கௌரவித்து வழங்கப்படுகின்றது.
இந்த விருதின் மூலமாக கௌரவிப்பை வழங்குவதற்கு, பல்வேறு வங்கித் தெரிவுகள் கவனத்தில் கொள்ளப்படுவதுடன், மதிப்பீட்டு முறைகளும் கடுமையானதாக அமைந்திருக்கும். இலங்கையில் காணப்படும் மாபெரும் தனியார் வணிக வங்கிகளில் ஒன்றாக சம்பத் வங்கி திகழ்கிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாக செயற்பாட்டில் உள்ளது. 450 பில்லியன் ரூபாய்க்கு மேலான சொத்துப் பெறுமதியை வங்கி
கொண்டுள்ளதுடன், அதன் பங்குதாரர்களுக்கு உயர் வருமானங்களை ஈட்டித்தருகின்றன. இலங்கையின் வங்கித்துறையில் இது புகழ்பெற்ற வங்கியாக திகழ்வதுடன், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு புத்தாக்கமான அம்சங்கள் நிறைந்த வங்கிச் சேவைகளை வழங்
குவதில் இலங்கையின் வங்கித்துறையில் முன்னோடியாக திகழ்கிறது. Uni-banking எனும் விசேட வங்கிச் சேவையை அறிமுகம் செய்வதில் சம்பத் வங்கி முன்னோடியாக திகழ்ந்திருந்தது. சகல சேவை நிலையங்களும் ஒன்றிணைக்கப்பட்டு, வலையமைப்பைச் சேர்ந்த எந்தவொரு நிலையத்துடனும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கல் வாங்கல்களை பேண வசதிகளை ஏற்படுத்தியிருந்தது. ஆரம்பத்திலிருந்தே முழுமையாக கணனி மயப்படுத்தப்பட்ட வங்கியாக சம்பத் வங்கி திகழ்ந்திருந்ததுடன், இலங்கையின் ATM மற்றும் கிரெடிட்கார்ட்களை அறிமுகம் செய்த முதலாவது வங்கியாகவும் திகழ்ந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM