யாழ். பல்கலைக்கழக மோதல் : சபையில் சம்பந்தன் கோரிக்கை

Published By: MD.Lucias

21 Jul, 2016 | 05:28 PM
image

 (ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையிலான மோதல் சம்பவம் போன்று ஏனைய பல்கலைக்கழகங்களிலும் சில சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அவற்றின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்குமாயின் அவற்றுக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் சபையில் கோரிக்கை விடுத்தார். 

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக  பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை கருத்து  வெளியிடுகையிலேயே  அவர்  மேற்கண்ட கோரிக்கையை  விடுத்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், 

பல்கலைக்கழகத்திற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் புரிந்துணர்வின்மை காரணமாக ஏற்பட்ட மோதலானது துரதிஸ்டவசமான சம்பவமொன்றாகும். அவ்வாறான புரிந்துணர்வின்மைகளை தவிர்த்துக் கொள்வதில் அனைவரும் உறுதியுடன் செயற்பட வேண்டும். எவ்வாறிருப்பினும், அந்த நிலைமையானது மிகவும் துரிதமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது. அதற்காக சகல மாணவர்களும் பல்கலைக்கழக அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். 

இத்தகைய மோதல் சம்பவங்கள் தொடர்வதற்கு இடமளிக்கக்கூடாது. அது எமது கடமையாகும். பல்கலைக்கழகம் மீண்டும் விரைந்து திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தின் சில பிரிவுகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன.  சம்பவம் பற்றிய விசாரணைகள்; மேற்கொள்ளப்படுவதுடன், விசாரரணைகள் நிறைவடைந்ததும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

இதுபோன்ற  விடயங்களை தவிர்த்துக் கொள்வதில் நாம் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனைய பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் எதையும் நான் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. எனினும். அந்த சம்பவங்கள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16