பிரபல நடிகரும், இயக்குநருமான ப்ரித்விராஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ப்ரித்விராஜ் டிஜோ ஜோஸின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ப்ரித்விராஜ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
நான் கடந்த 7 ஆம் திகதி முதல் டிஜோ ஜோஸின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறேன். நாங்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். படப்பிடிப்பை துவங்கும் முன்பு அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. கோர்ட் ரூம் செட்டில் கடைசி நாள் படப்பிடிப்பை முடித்த பிறகு அனைவருக்கும் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று இம்முறை பரிசோதனையில் வந்துள்ளது.
இதையடுத்து நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் எந்த அறிகுறியும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் குணமாகி படப்பிடிப்புக்கு திரும்புவேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது ப்ரித்விராஜ் ஜோர்டானில் பாலைவனத்தில் சிக்கிக் கொண்டார். ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்காக அங்கு சென்ற போது ஊரடங்கு அமலுக்கு வந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படாததால் நாடு திரும்ப முடியாமல் தவித்தார்.
அதன் பிறகு மே மாதம் தான் அவர் நாடு திரும்பினார். நாடு திரும்பிய அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அப்பொழுது எல்லாம் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது சொந்த மாநிலத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM