வரலாற்றுப் பிரசித்தி பெற்றதும் தொல்பொருள் ஆய்வகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டதுமான சொரகுன ரஜமகா விகாரை வளவில் புதையல் தோண்டிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட மூவர் பண்டாரவளைப் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தின் ஹல்துமுள்ளைப் பகுதியிலேயே, மேற்படி வரலாற்று பிரசித்திபெற்ற சொரகுன ரஜ மகா விகாரை அமைந்துள்ளது.
பதுளை மாவட்ட பொலிஸ் நிலையமொன்றின் பொலிஸ் சார்ஜன்ட்டாக கடமையாற்றி வந்த இவர் ஏனைய இரு இளைஞர்களையும் கூட்டிச் சென்று குறித்த இடத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்தனர்.
இது குறித்து சொரகுன ரஜமகா விகாரைப் பொறுப்பாளரான சங்கைக்குரிய பன்சானந்த தேரர் பண்டாரவளைப் பொலிசாருக்கு செய்த முறைப்பாட்டிற்கமைய விரைந்த பொலிசார், குறித்த இடத்தை சுற்றி வலைத்த பொலிசார் புதையல் தோண்டிய மூவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து குறித்த மூவரும் விசாரணையின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுப்பதாக பிரதேச பொலிஸ் அதிபர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM