குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,403 ஆக உயர்வு!

Published By: Vishnu

18 Oct, 2020 | 03:00 PM
image

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் எட்டுப் பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து 5 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையிலிருந்து மூவரும் இவ்வாறு குணமடைந்த நிலையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது இலங்கையில் 3,403 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் 121 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் மொத்த கொரானா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,475 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களுள் 115 பேர் மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர். ஏனைய ஆறு பேர் நட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர்.

இது இவ்வாறிருக்க மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலில் பாதிக்கப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 2,014 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 16 வெளிநாட்டினர் உட்பட 2,059 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 306 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17