மாரவில - தொடுவாவ கரையோரப் பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட கடலாமைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் நேற்று சனிக்கிழமை மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடுவாவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை காலை மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற போதே கடலாமைகளைப் பிடித்துள்ளனர்.
அவற்றினை விற்பனை செய்யும் நோக்குடன் இரகசியமாக கொண்டு வந்துள்ளதாகவும் அவர்கள் இவ்வாறு நீண்ட நாட்களாக கடலாமைகளைப் பிடித்து அவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கடலாமை ஓடுகள், 20 கிலோ நிறையுடைய கடலாமை இறைச்சி, தராசு மற்றும் கத்திகள் ஆகியன கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடு;த்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM