(ஆர்.ராம்)
20ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக எதிர்ப்பதென்ற தீர்மானத்தில் உறுதியாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ரூபவ் தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மையினங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 20இற்கு எதிரான கூட்டுச் செயற்பாடுகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 21ஆம் 22ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் 20ஆம் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
20ஆவது திருத்தத்தினை ஆரம்பத்திலிருந்தே முற்று முழுதாக எதிர்க்கிறோம். அதனை ஒட்டு மொத்தமாக ஜனநாயக விரோத செயற்பாடாகவே கருதவேண்டியுள்ளது.
அது மட்டுமி ல்லாமல் அதிகாரப் பகிர்வு தத்துவத்தை மீறியதாகவே 20ஆவது திருத்தம் உள்ளது. அரச அதிகாரங்கள் மூன்று நிறுவனங்களிடம் இருக்க வேண்டும்.
அதில் ஒவ்வொன்றும் இன்னொன்றினுடைய செயற்பாட்டை மேற்பார்வை செய்ய வேண்டும். ஆனால் 20ஆவது திருத்தம் அவற்றை எல்லாம் மீறி அனைத்து அதிகாரங்களும் ஒரு நிறுவனத்திடம் குறிப்பாக நபர் ஒருவரிடத்தில் அதிகாரங்களை கொடுப்பதாகவே அமைகிறது.
இதனால் இந்த திருத்தினை ஆரம்பத்திலிருந்தே நாம் எதிர்த்து வருகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
நாம் அதில் உள்ள அனைத்து ஏற்பாடுகளையும் எதிர்ப்பதாக கூறியுள்ளோம். ஆகவே நீதிமன்றத்தின் தீர்மானம் பாராளுமன்றத்திற்கு அனுப்பபட்டுள்ளது. அது எவ்வாறாக இருந்தாலும் ஒட்டு மொத்தமாக 20ஐ எதிர்ப்பதே எமது நிலைப்பாடாகும்.
இந்த நிலைப்பாட்டை உடைய முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புக்களுடனும் பேச்சுக்களை முன்னெடுத்தபோது இந்த விடயத்தில் கூட்டிணைந்து எதிர்ப்பினை வெளியிடுவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM