சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை காத்திரமான முறையில் பயன்படுத்துவது குறித்து இலங்கை - பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஆராய்வு

Published By: R. Kalaichelvan

17 Oct, 2020 | 12:15 PM
image

(நா.தனுஜா)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை எவ்வாறு காத்திரமான முறையில் பயன்படுத்துவது என்பது குறித்தும் அதனை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கப்படும் நகர்வுகளின் போது ஏற்படும் நெருக்கடிகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது.

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மட் சாத் கட்டாக், கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டிருக்கிறது.

இக்கலந்துரையாடலின் போது பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை எவ்வாறு காத்திரமான முறையில் பயன்படுத்த முடியும் என்று விரிவாக ஆராயப்பட்டது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இருதரப்பிலிருந்தும் ஏற்படத்தக்க பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது, எவ்வாறு தீர்வை எட்டுவது என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும் ஆடை உற்பத்தி, கட்டுமானப்பொருட்கள், வேளாண்மை மற்றும் பதப்படுத்தல், மருந்துப்பொருட்கள், சுற்றுலா மேம்பாடு, தொழில்நுட்ப அபிவிருத்தி, வர்த்தகம், முதலீடு மற்றும் தொழிற்துறை வளர்ச்சி ஆகிய துறைகளில் இருநாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்குக் காணப்படும் சாத்தியப்பாடு தொடர்பிலும் இருதரப்பினரும் தமது அபிப்பிராயங்களை முன்வைத்தனர்.

இதன்போது பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தான் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என்று அந்நாட்டு உயர்ஸ்தானிகர் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21