ஒரு பெண் தனது கணவரால் ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் பூட்டி சிறைவைக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் ரிஷ்பூர் கிராமத்தில், வாழும் 35 வயது பெண்னே இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ளார்.
அயலவர்கள் கொடுத்த தகவலுக்கு அமைய குறித்த பெண், பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடை அதிகாரியினால் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்தபெண், பல நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்ததினால் உடல் மெலிந்து காணப்படுகின்றார்.
குறித்த பெண் மனநிலை பாதிக்கபட்டவர் என தெரிவிக்கப்பட்டபோதும் அது உண்மையல்ல என மீட்பு குழு தெரிவித்துள்ளது. அவர் சுயநினைவுடன் இறுப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தம்பதியினருக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணமான நிலையில் 16 வயது மகன் மற்றும் 15 மற்றும் 11 வயதுடைய இரண்டு மகள்கள் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
குறித்த பெண் இவ்வாறு சிறைப்படுத்தப்பட்டதில் அவரின் குழந்தைகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைசெய்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM