மோட்டார் சைக்கிள் திருட முயன்றவரிடம் கைகுண்டு மீட்பு! யாழில் சம்பவம்

Published By: Jayanthy

16 Oct, 2020 | 10:35 PM
image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் திருடுவதற்கு முயன்ற ஒருவரை  பொதுமக்கள் மடக்கிப் பிடித்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபரை பொலிசார் சோதனையிட்டபோது  அவரிடமிருந்து வெடிக்கக்கூடிய நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

பொன்னகர் முறிகண்டியை வசிப்பிடமாக கொண்ட 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைக்குண்டுடன் யாழ்ப்பாண பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிள்களை திருடுவதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததாகவும் , திருட்டில் ஈடுபடும் போது  கைக்குண்டினை   காட்டி மிரட்டி திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும், ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களை திருடியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார்.

திருடிய மோட்டார் சைக்கிள்களில் ஒரு மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாண பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் விசாரணைகளின் பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17