ரஷ்யாவும் அமெரிக்காவும் எந்தவொரு புதிய நிபந்தனைகளையும் விதிக்காமல் 2021 பெப்ரவரி மாதத்தில் காலவாதியாகும் ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தமானது ரஷ்யாவும் அமெரிக்காவும் பயன்படுத்தக்கூடிய மூலோபாய அணு ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் குண்டுவீச்சுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந் நிலையில் காலாவதியாகும் இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்கத் தவறினால், அமெரிக்க மற்றும் ரஷ்ய மூலோபாய அணு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புகளின் அனைத்து தடைகளையும் நீக்கி, பனிப்போருக்குப் பிந்தைய ஆயுதப் பந்தயம் மற்றும் மொஸ்கோவிற்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான பதட்டங்களைத் தூண்டிவிடும்.
இந் நிலையில் இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ள ஜனாதிபதி புட்டின், இந்த ஒப்பந்தம் இப்போது வரை திறம்பட செயல்பட்டு வருவதாகவும், அது செயல்படுவதை நிறுத்தினால் அது மிகவும் வருத்தமாக அமையும் என்றும் கூறினார்.
மேலும் இந்த ஒப்பந்தத்தை நீடிப்பதற்கான எந்தவித உடன்பாடுகளும் அமெரிக்காவுடன் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM