உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் பற்­றிய புதிய சட்டம் விரைவில்

Published By: Robert

21 Jul, 2016 | 09:56 AM
image

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தொடர்பில் நடை­மு­றை­யி­லுள்ள சட்டம் மிகவும் பழை­மை­ வாய்ந்­த­தாகும். அதனை தற்­போ­தைய நவீன யுகத்­திற்குப் பொருத்­த­மாக மாற்­றி­ய­மைக்க வேண்­டி­யுள்­ளது. எனவே அப்­ப­ணி­யினை மேற­்கொள்­வ­தற்கு குழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார்.

பதுளை மாவட்­டத்­தி­லுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் செய­லா­ளர்கள் மற் றும் ஆணை­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பு ஊவா மாகாண சபையின் கேட்­போர்­ கூ­டத்தில் நடை­பெற்­றது. அதன்­போதே அவர் இத னைத் தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்த பின்னர் அதன் செயற்­பாடு முடங்­கிப்­போ­யுள்­ள­தாக சிலர் குற்றஞ் சாட்­டு­கின்­றனர். எ­னினும் திற­மை­யான அர­சி­யல்­வா­திகள் இருப்­ப­துபோல் திற­மை­யான அதி­கா­ரி­களும் உள்­ளனர். ஆகவே அக்­குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு இட­ம­ளிக்­காது அது­ தொ­டர்பில் அதி­கா­ரிகள் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

தற்­போது நீங்கள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தலை­வர்கள் மற்றும் நகரபிதாக்­களின் வகி­பா­கங்­களில் உள்­ளீர்கள். ஆகவே நீங்கள் அர­சி­யல்­வா­திகள் இல்­லா­வி­டத்தும் அவர்­களைப் போல் மக்­க­ளுடன் நெருக்­க­மான உறவைப் பேணி சேவை செய்ய வேண்டும். மேலும் இவ்­வா­றான கால கட்­டத்தில் முடி­யு­மாயின் விடு­முறை நாட்­க­ளிலும் மக்­க­ளுக்கு சேவை செய்ய பின்­நிற்­கக்­கூ­டாது.

பொது­வாக மக்கள் தங்­களின் கட்­டு­மானப்பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிடம் அனு­மதி கேட்டு விண்­ணப்­பித்தால், அது ­தொ­டர்­பி­லான முடி­வினை 14 நாட்­க­ளுக்குள் வழங்க வேண்டும். அவ்­வாறு உரியமுறையில் சேவை­யினை வழங்­கி­னால்தான் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தொடர்கில் மக்­க­ளுக்கு நன்­ம­திப்பு ஏற்­படும்.

அத்­துடன் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் இடம்­பெறும் துஷ்­பி­ர­யோகம் மற்றும் விரயம் தொடர்பில் அவ­தானம் செலுத்தி, அதற்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண் டும். வரு­மான மார்க்­கத்தில் இடை­யூ­று கள் இருப்பின் சட்­டப்­படி அணுகி உரிய தீர்­வினைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். மேலும் ஒவ்­வொரு மாதமும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் வரு­மா­னத்தை அதி­க­ரிப்­ப­தற்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். சோலைவரி செலுத்­தா­தோரின் சொத்­து­க்களை கைய­கப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

ஏரா­ள­மானோர் பௌதீக அபி­வி­ருத்­தியே சிறந்த பலனைத் தரு­வ­தாகக் கரு­து­கின்­றனர். எனினும் மனி­த­வள அபி­வி­ருத்­தியின் மூலம் அதி­க­ள­வான பிர­யோ­ச­னங்­களை அடையமுடியும். ஆ­கவே எதிர்­கா­லத்தில் மனி­த­வள அபி­வி­ருத்தி தொடர்பில் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் அதிக கரி­சனை காட்ட வேண்டும்.

அத்­துடன் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­னூ­டாக வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒப்­பந்தக்காரர்­க­ளுக்கு ஒப்­பந்தம் வழங்­கும்­போது காலக்­கெடு தொடர்பில் உரிய அவ­தானம் செலுத்தவேண்டும். குறி த்த காலப்­ப­கு­தியில் வேலைத்­திட்­டங்­களை பூர்த்திசெய்­யாத ஒப்­பந்தக்காரர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மேலும் எந்­த­வொரு ஒப்­பந்தத்­தையும் அதன் இலாபம், நஷ்டம் தொடர்பில் அவ­ தானம் செலுத்­தாது வழங்கக் கூடாது.

மேலும், உள்­ளூ­ராட்சி மன்­ற­ங்கள் தொட ர்பில் நடைமுறையில் உள்ள சட்டம் மிக வும் பழைமை வாய்ந்ததாகும்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தொடர்பில் நடை­மு­றை­யி­லுள்ள சட்டம் மிகவும் பழை­மை­ வாய்ந்­த­தாகும். அதனை தற்­போ­தைய நவீன யுகத்­திற்குப் பொருத்­த­மாக மாற்­றி­ய­மைக்க வேண்­டி­யுள்­ளது. எனவே அப்­ப­ணி­யினை மேற­்கொள்­வ­தற்கு குழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார்.

பதுளை மாவட்­டத்­தி­லுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் செய­லா­ளர்கள் மற் றும் ஆணை­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பு ஊவா மாகாண சபையின் கேட்­போர்­ கூ­டத்தில் நடை­பெற்­றது. அதன்­போதே அவர் இத னைத் தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்த பின்னர் அதன் செயற்­பாடு முடங்­கிப்­போ­யுள்­ள­தாக சிலர் குற்றஞ் சாட்­டு­கின்­றனர். எ­னினும் திற­மை­யான அர­சி­யல்­வா­திகள் இருப்­ப­துபோல் திற­மை­யான அதி­கா­ரி­களும் உள்­ளனர். ஆகவே அக்­குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு இட­ம­ளிக்­காது அது­ தொ­டர்பில் அதி­கா­ரிகள் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

தற்­போது நீங்கள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தலை­வர்கள் மற்றும் நகரபிதாக்­களின் வகி­பா­கங்­களில் உள்­ளீர்கள். ஆகவே நீங்கள் அர­சி­யல்­வா­திகள் இல்­லா­வி­டத்தும் அவர்­களைப் போல் மக்­க­ளுடன் நெருக்­க­மான உறவைப் பேணி சேவை செய்ய வேண்டும். மேலும் இவ்­வா­றான கால கட்­டத்தில் முடி­யு­மாயின் விடு­முறை நாட்­க­ளிலும் மக்­க­ளுக்கு சேவை செய்ய பின்­நிற்­கக்­கூ­டாது.

பொது­வாக மக்கள் தங்­களின் கட்­டு­மானப்பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிடம் அனு­மதி கேட்டு விண்­ணப்­பித்தால், அது ­தொ­டர்­பி­லான முடி­வினை 14 நாட்­க­ளுக்குள் வழங்க வேண்டும். அவ்­வாறு உரியமுறையில் சேவை­யினை வழங்­கி­னால்தான் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தொடர்கில் மக்­க­ளுக்கு நன்­ம­திப்பு ஏற்­படும்.

அத்­துடன் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் இடம்­பெறும் துஷ்­பி­ர­யோகம் மற்றும் விரயம் தொடர்பில் அவ­தானம் செலுத்தி, அதற்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண் டும். வரு­மான மார்க்­கத்தில் இடை­யூ­று கள் இருப்பின் சட்­டப்­படி அணுகி உரிய தீர்­வினைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். மேலும் ஒவ்­வொரு மாதமும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் வரு­மா­னத்தை அதி­க­ரிப்­ப­தற்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். சோலைவரி செலுத்­தா­தோரின் சொத்­து­க்களை கைய­கப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

ஏரா­ள­மானோர் பௌதீக அபி­வி­ருத்­தியே சிறந்த பலனைத் தரு­வ­தாகக் கரு­து­கின்­றனர். எனினும் மனி­த­வள அபி­வி­ருத்­தியின் மூலம் அதி­க­ள­வான பிர­யோ­ச­னங்­களை அடையமுடியும். ஆ­கவே எதிர்­கா­லத்தில் மனி­த­வள அபி­வி­ருத்தி தொடர்பில் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் அதிக கரி­சனை காட்ட வேண்டும்.

அத்­துடன் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­னூ­டாக வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒப்­பந்தக்காரர்­க­ளுக்கு ஒப்­பந்தம் வழங்­கும்­போது காலக்­கெடு தொடர்பில் உரிய அவ­தானம் செலுத்தவேண்டும். குறி த்த காலப்­ப­கு­தியில் வேலைத்­திட்­டங்­களை பூர்த்திசெய்­யாத ஒப்­பந்தக்காரர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மேலும் எந்­த­வொரு ஒப்­பந்தத்­தையும் அதன் இலாபம், நஷ்டம் தொடர்பில் அவ­ தானம் செலுத்­தாது வழங்கக் கூடாது.

மேலும், உள்­ளூ­ராட்சி மன்­ற­ங்கள் தொட ர்பில் நடைமுறையில் உள்ள சட்டம் மிக வும் பழைமை வாய்ந்ததாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10