தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகவும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காகவும் உயிர்த்தியாகம் செய்த படை வீரர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் இராணுவ வீடமைப்பு வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு பணிப்புரை வழங்கினார்.
நேற்று கொழும்பு பாதுகாப்பு அமைச்சு தலைமையகத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இவ்வாறு பணிப்புரை வழங்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி இக்கலந்துரையாடலில் பங்கேற்றதுடன் அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
முப்படைகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து நிகழ்ச்சித்திட்டங்களையும் செயலூக்கமான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு அறிவுரை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், படைவீரர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் பற்றிக் கேட்டறிந்தார்.
பத்தரமுல்ல அகுரேகொடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இராணுவத் தலைமையகத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
கரையோரப் பாதுகாப்புக்காக கடற்படையினரின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் சுற்றாடல் அமைச்சு, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் கடற்படை ஆகியன ஒன்றிணைந்து இதற்கான புதியதொரு செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் தேவைப்பாட்டை இதன் போது ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தேசிய மாணவர் படையணியினை பலப்படுத்துதல் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன் சிறந்த மற்றும் ஒழுக்கவிழுமியம் நிறைந்த எதிர்கால சந்ததியினரை நாட்டில் உருவாக்குவதற்காக நாட்டின் அனைத்து கல்லூரிகள் மற்றும் மத்திய கல்லூரிகளில் மாணவர் படையணியினை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி ஆகியோரும் பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி உள்ளிட்ட முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM