அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதிதேர்தலின் பிரதான வேட்பாளரான ஜோ பைடனின் பிரச்சாரத்துடன் தொடர்புடைய இரு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து துணை ஜனாதிபதியாக போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டக் எம்ஹாஃப் ஆகியோரின் பயணங்கள் மற்றும் வட கரோலினா பிரச்சார நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஊழியர்கள் அல்லாத விமானக் குழு உறுப்பினர் மற்றும் ஹாரிஸின் தகவல் தொடர்பு இயக்குனர் லிஸ் ஆலன் ஆகியவர்களுக்கே புதன்கிழமை இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இறுதியாக ஒக்டோபர் 8 ஆம் திகதி கமலா ஹாரிஸுடன் விமானத்தில் பயணித்துள்ளனர்.
கமலா ஹாரிஸ் மற்றும் டக் எம்ஹாஃப்க்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட வில்லை எனினும் அவர்களின் பிரச்சார நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திங்களன்று மீண்டும் கமலா ஹாரிஸ் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஜோ பைடனின் திட்டங்கள் பாதிக்கப்படவில்லை.
இதேவேளை, ஜோ பைடனின் வியாழக்கிழமை மாலை நகரத்தில் தனது பிரசார நடவடிக்கையை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு இறுதியாக கொரோனா தொற்று பரிசோதனை முடிவு செவ்வாயன்று அறிவிக்கப்பட்டது. அதல் அவறுக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM