முல்லைத்தீவில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி திருத்தப்பணிகள் மேற்கொண்டு வரும் ஊழியர்களின் இருவர் கம்பஹா மாவட்டத்திலிருந்து வேலைக்குச் சென்ற நிலையில் வடமாகாண ஆளுநரின் உத்தரவிற்கு அமைவாக தளிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாணத்தில் இடம்பெற்று வரும் வீதி திருத்தப்பணிகள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை . சுகாதார நடைமுறைகளுடன் ஊழியர்கள் வீதி திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .
கம்பஹா மாவட்டத்திலிருந்து சென்ற இரு ஊழியர்கள் வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் . அவர்களுக்கு கோரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தினடிப்படையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது .
குறித்த இருவரையும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் தொடர்ந்து வீதி திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் கொழும்பிலிருந்து பொருட்கள் எடுத்து செல்வதில் சில இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றோம் . இருந்தும் உரியமுறையில் பணிகளை மேற்கொள்வதற்கு வடமாகாண ஆளுநர் , ஒப்பந்ததாரரும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்களும் ஒத்துழைப்புக்களை வழங்கி பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம் என்று மேலும் தெரிவித்துள்ளார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM