இந்தியாவின் ஐதராபாத்தில் சுவரொன்று இடிந்து வீழ்ந்ததன் காரணமாக மூன்று குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்தும் உள்ளனர்.
ஐதராபாத்தில் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக ஓல்ட் சிட்டி பகுதியில் இருந்த சுற்றுச்சுவரொன்றே அருகிலிருந்த 10 வீடுகளின் மீது விழுந்துள்ளது.
இதன்போது, 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளதாவது,
கற்பாறைகளாலானபெரிய சுவர் இடிந்து 10 வீடுகளின் மீது விழுந்துள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு 11 அளவில் நடைபெற்றுள்ளது.
இரண்டு வீடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 4 பேர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM