மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பத்தலாகம பகுதி வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் உட்பட இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த வீட்டின் அறையொன்றில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதுடன் அதே அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் கழுத்தை வெட்டி கொலை செய்து விட்டு சந்தேக நபர் தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
திருகோணமலை வீதி - மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஹிங்குருவௌ - எல்லவௌ பகுதியைச் சேர்ந்த 57 வயதான சந்தேக நபரே தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM