காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களில் 128 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை 13.10.2020 சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 08 ஆம் திகதி புதன்கிழமை கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 82 பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் விஷேட கொரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அனைவரும் கம்பஹா மாவட்டத்திலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் நாட்டின் நாலாபுறங்களையும் வசிப்பிடமாகக் கொண்ட பெண்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் முதலாம் அலை பெருந்தொற்றுக் காலத்தில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு இலங்கையின் நாலாபுறங்களிலுமிருந்தும் அழைத்தச் வரப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் விஷேட கொரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்பிரிவு கடந்த புதன்கிழமை 08.10.2020 தொடக்கம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM