போர்க்களமாகியது வாழைச்சேனை : இருவர் வைத்தியசாலையில் அனுமதி - 15 பேர் கைது

Published By: Digital Desk 4

13 Oct, 2020 | 04:03 PM
image

வாழைச்சேனை பிரதேச கருங்காலிச்சோலை பேத்தாழையில் இரு கோஸ்டிகளுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பொலிசார் விரைந்து செயற்பட்டதன் காரணமாக உயிர் சேதம் எதுவுமின்றி பொதுமக்கள் காப்பாற்றப்பட்டதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

கருங்காலிச்சோலை ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய நிர்வாகம் தொடர்பாக இரு குழுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வந்த முறுகல் நிலை நேற்று இரவு திங்கட்கிழமை இரவு குழு மோதலாக மாறியதை அடுத்து காயமடைந்த இருவர் வாழைச்சேனை ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த சில மாதங்களாக முறுகல் நிலை ஏற்பட்டு வந்ததுடன் அவ்வப்போது அசம்பாவிதங்களும் இடம்பெற்றுள்ளன.

இச்சம்பவம் இடம்பெற்ற வேளை பொலிசாரும் அங்கு வரவழைக்கபட்டனர்.

இதேவேளை பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை கைகலப்பாக மாறியது. சம்பவத்தில் தொடர்புபட்ட  ஒரு சாராரின் வீடுகளுக்கு கல் வீச்சு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.

 சிலர் கைது செய்யப்பட்டு பொலிஸ் வாகனத்தில் அழைத்து சென்ற வேளை ஆத்திரமடைந்த நிலையில் பொலிஸ் வாகனத்திற்கும் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்த நிலையல்.பொலிசார் கலகத்தை அடக்க வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தை அடுத்து கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விரைந்ததையடுத்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30