SLT மற்றும் மொபிடெல் மனுசத் தெரனவுடன் கூட்டிணைந்து தேசிய மட்டத்திலான சமூக பொறுப்புணர்வுத் திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் ஊடாக பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட தேசிய போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேரூந்துகளை முற்றுமுழுதாக நூலகங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கை தேசிய நூலகம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து இம்முன்னெடுப்பினை மேற்கொண்டது.
தேசிய தொலைத்தொடர்புச் சேவை வழங்குனர் என்ற வகையில் இலங்கை மாணவர்களின் கல்வியறிவு மற்றும் கற்றல் பழக்கங்களை மேம்படுத்துவதில் பாடசாலை நூலகங்கள் கொண்டுள்ள முக்கியத்துவத்தினை SLTமற்றும் மொபிடெல் அறிந்துள்ளது.
அந்த வகையில் E-கற்றல் மற்றும் M-கற்றல் போன்ற தளங்கள் மூலம் வாசிப்புக்கான தரமான அணுகலை வழங்குவதன் மூலம் கல்வி அமைப்பு முறையை ஆதரிப்பதற்கு SLTகுழு உறுதிபூண்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் மேலதிக அறிவினைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் வலுவூட்டப்படுகின்றனர்.
இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள 25 நூலகங்கள் கற்றல் மையங்களாக செயற்படுவதுடன் அணுகக்கூடிய கல்வி வளங்களைக் கொண்டு மாணவர்களுக்கு சம வாய்ப்புக்களை வழங்குவதுடன் வாசிப்புப் பழக்கத்தினையும் உருவாக்குகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM