2021 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இக் குழுவில் அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன, ஜனக்க பண்டார தென்னகோன், கெஹலிய ரம்புக்வெல்ல, சமல் ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
ஆண்டு தோறும் 6,000 மெட்ரிக் தொன் பாஸ்மதி அரிசியை பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை-பாகிஸ்தான் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த காலங்களில் பாஸ்மதி இறக்குமதிக்கான அனுமதி தனியார் துறையினருக்கு வழங்கபபட்டிருந்தது.
இந்த அரிசி இறக்குமதியின் போது பல்வேறு நிதி மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.இதனை கருத்திற் கொண்டு இலங்கை அரச வர்த்தகக்கூட்டுத்தாபனம் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம், லங்கா சதோச போன்ற அரச நிறுவனங்கள் மாத்திரம் குறித்த நிபந்தனைகளுக்கு அமைய பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கபபட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM