வடமராட்சி, கரணவாய் மற்றும் வதிரி பகுதிகளில் அரசின் கட்டளையை மீறி இயங்கிய தனியார் கல்வி நிலையங்கள் இரண்டுக்கு நெல்லியடி பொதுச் சுகாதார பரிசோதகரால் மறு அறிவித்தல்வரை முத்திரையிடப்பட்டு மூடப்பட்டன.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் தலைமையிலான மாவட்ட கோவிட் -19 உயர்மட்டக் குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
எனினும் கரணவாய் மற்றும் வதிரி ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிலையங்கள் இரண்டு கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தமை தொடர்பில் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையிலேயே அந்தக் கல்வி நிலையங்களுக்கு நெல்லியடி பொதுச் சுகாதார பரிசோதகரால் நேற்று சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM