எல்பிட்டிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஊருகஸ்மங்சந்தி - கந்தஹேன பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 9 கிராம் 750 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிப்பன்கந்த - கந்தஹேன பகுதியைச் சேர்ந்த 26 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொரகஹஹேன - தலகல சந்தியில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சோதனை நடவடிக்கையில் 10 கிராம் ஹெரோயினுடன் நாராஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து பாதுக்கை பகுதியில் வைத்து 100 கிராம் ஹெரோயினுடன் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 7 - வோட் பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, வென்னப்புவ பொலிஸார் லுனுவில பகுதியில் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 125 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது. சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM