மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இளைஞரை மணந்த வைத்தியர்

Published By: Digital Desk 3

10 Oct, 2020 | 01:12 PM
image

இந்தியாவில் கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பொல்லரிமாடி கிராமத்தை சேர்ந்த வைத்தியர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இளைஞரை மணந்த முடிந்துள்ளார்.

குறித்த வைத்தியர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருக்கு வட இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் தருண் சந்தீப் தேசாய் என்பவரின் நட்பு கிடைத்துள்ளது.

ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்களின் நட்பு நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிவிட்டது. இதன் காரணமாக, ஒரு கட்டத்தில் இருவரும் ஓரினசேர்கையாளராக மாறினார்கள். தன் பின், சரத் பொன்னப்பா, தருண் சந்தீப் தேசாய்யுடன் நெருக்கமாக இருந்ததால் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவர் மனைவியை விவகாரத்து செய்துள்ளார்.

இதையடுத்து, கடந்த மாதம் 25-ஆம் திகதி சரத் பொன்னப்பா, தருண் சந்தீப் தேசாயை திருமணம் செய்துகொண்டார். ஆண் - பெண் மணமக்களுக்கு எப்படி திருமணம் நடைபெறுமோ அதுபோல் இருவரும் புதிய ஆடைகள் அணிந்து திருமணம் செய்துள்ளனர்.

இருவரும் கொடவா சமுதாய மக்களின் பாரம்பரிய உடை அணிந்து, நீண்ட வாள், கத்தி, தலைப்பாகை உள்ளிட்டவை அணிந்து கொடவா சமுதாய பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணம் குறித்து குடகு கொடவா சமுதாய நிர்வாகி ஒருவர்,

இந்த திருமணம் இயற்கைக்கு விரோதமானது. இவ்வாறு திருமணம் செய்துகொள்பவர்கள் நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ முடியாது.இதுபோன்ற ஓரினச் சேர்க்கை திருமணங்கள் வெளிநாடுகளில் சகஜம். ஆனால் நமது கலாச்சாரத்திற்கு இது எதிரானது. அவரை நாங்கள் மன்னிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right