பொலிஸ் புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உயர் அதிகாரியாகத் தன்னை காட்டி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குருணாகல் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வெள்ளிக்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் நகர்ப்பகுதியில் வைத்து பொலிஸார் சந்தேகத்திற்கிடமான ஜீப்பொன்றை மடக்கி அதன் சாரதியை கைது செய்தனர். சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது பொலிஸ் சீருடையில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நெல்லிய - மினுவங்கெட்டே பகுதியைச் சேர்ந்த 47 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM