நாட்டில் இன்று மாலை வரை 16 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,504 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் என்றும், 11 பேர் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என்றும், மூவர் மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணி பரவலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 1,069 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 24 பேரும் குணமடைந்த நிலையில் வைத்தியசாலையை விட்டு வெளியேற்றப்பட்டுள்னர்.
அதனால் குணமடைந்தவர்களில் எண்ணிக்கையும் 3,296 உயர்வடைந்துள்ளது.
தற்போது 1,195 கொரோனா தொற்றாளர்கள் நாடு முழுவதும் உள்ள 12 வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சந்தேகத்தின் பேரில் 350 பேர் வைத்தியக் கண்காணிப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM