பாராளுமன்ற அலுவல்கள் சேவை பிரிவில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரின் உறவினர் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவருடன் தொடர்புகளை பேணிய ஊழியர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள பாராளுமன்ற அலுவல்கள், சேவை பிரிவின் கட்டத்தொகுதியில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் உறவினருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற அலுவல்கள் சேவைப் பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் அந்த பிரிவுக்குள் வெளியாட்களை அனுமதிக்கும் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, பாராளுமன்ற ஊழியரின் உறவினருக்கு கொரோனா தொற்று என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லையென இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM