(எம்.நியூட்டன்)
கொவிட் 19 தாக்கம் சமூகத் தொற்றாக அதிகரித்துள்ள நிலையில் பொது மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு யாழ்.மாநகரசபை முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தெரிவித்தார்.
கொவிட் 19 தாக்கமானது தற்போது வேகமாக பரவுகின்ற சூழல் அவதானிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளிகளைப் பின்பற்றுவதுடன் மிக அவசிய தேவைகளைக் கருதியே வெளியில் நடமாடவேண்டும்.
எவ்வளவு தூரம் நாங்கள் எங்களை தனித்திருப்பதன் மூலம் தான் இந்தத் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் அறிவுறுத்தல்களையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றது.
அதற்கு அமைய மாநகர சபை எல்லைக்குள் நாமும் எமது சுகாதாரப்பகுதியினரும் பொறுப்புடன் எமது கடமைகளை செயற்படுத்தி வருகின்றோம். பொது மக்கள் மற்றும் வர்த்தகர்கள் சுகாதாரம் தொடர்பில் ஏதாவது தேவைகள் இருப்பின் சுகாதாரத்திணைக்களத்திடனோ அல்லது மாநகர சபையுடனே தொடர்புகொள்வதன் மூலம் அதற்கான தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கொவிட் தாக்கம் தொடர்பில் சந்தேகம் ஏதும் இருப்பின் உடனடியாகவே வைத்தியசாலையை அணுகவேண்டும் எமது பிரதேசத்திலே மாவட்டத்திலே இந்த நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதுடன் சமூக இடைவெளியைப் பேணவேண்டும் மேலும் கொவிட் தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்கள் எவரும் இருந்தால் அல்லது சந்தேகமிருப்பின் சுகாதார திணைக்களத்தின் 24 மணிநேர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு எடுக்குமாறும் மாவட்டத்தில் இந் நோய் பரவாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM