அழிந்து போகின்ற கலைகளை அடுத்த பரப்பரையினரிடத்தில் ஒப்படைத்துச் செல்ல வேண்டும் என்று வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கலைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
யாழ்ப்பாண பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஒழுங்மைப்பில் கலை இலக்கியத்துறைக்கு பங்களிப்பு செய்து தற்போது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேராசிரியர் சண்முகதாஸ் மற்றும் அவரின் மனைவியார், கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண ஆளுநரின் செயலாளர், மற்றும் கலைத்துறை கலைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
உங்களை பார்க்கும் பொழுதுதான் கலைத்தாயும் இலட்சுமித்தாயும் ஒன்றாக இருப்பதில்லை என்ற கருத்து மீண்டும் நினைவுக்கு வருகின்றது. என்றாலும் கலைஞர்கள் களைத்துப்போகவில்லை. தங்களின் கலைப்பணியை ஆற்றிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அந்தக் கலைஞர்களோடு வடமாகாணம் என்றும் இணைந்திருக்கும்.
இலங்கையிலேயே வடமாகாணம் தான் கலைகளின் பிறப்பிடமாக காணப்பட்டது. இதனைப்பார்த்து தற்பெருமை கொண்ட நாம் தற்போது திகைத்துப்போய் நிற்கின்றோம். எமது இளைய சமுதாயம் அழிவுப்பாதையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. எமது கலைகளெல்லாம் அழிந்து போய்விடுமோ என்று பயந்த சந்தர்ப்பத்தில் தான் கலைப் பொக்கிசங்களாக இருக்கின்ற உங்களை சோர்ந்துபோக விடக்கூடாது என்பதற்காக உரிய பணியை முன்னெடுத்துள்ளோம்.
நீங்கள் கலைப்பணியை செய்வது மட்டுமல்லாது இக்கலையை அடுத்த தலைமுறைக்கும் மாற்றிச்செல்ல வேண்டும். அழிந்துபோகின்ற கலைகளை மீண்டும் புத்துயுரூட்டி இளைய சமூகத்திடம் பாரப்படுத்திச் செல்ல வேண்டும். நீங்கள் தான் சமூகத்தோடு வாழ்கிறீர்கள், கலைகளும் உங்களோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த கலைகளை தொடர்ந்து வாழவைக்க வேண்டியது உங்களுடைய தலையாய கடமை. அதற்கு நாம் உறுதுணையாக இருப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM