வடக்கில் வீட்டுப்பிரச்சினை உங்களுக்கு சில்லறைத்தனமானதாக தெரிகின்றதா? சபாநாயகரிடம் கேள்வி எழுப்பிய சார்ல்ஸ் நிர்மலநாதன்

Published By: Digital Desk 3

07 Oct, 2020 | 05:49 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

பிரதமரிடம் கேள்வி கேற்கும் வேளைகளில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை கேளுங்கள், மாறாக சில்லறைத்தனமான கேள்விகளை கேற்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலனாதனை பார்த்து சபாநாயகர்  தெரிவித்தார். வடக்கின் 6600 குடும்பங்ககளுக்கான பிரச்சினை உங்களுக்கு சில்லறைத்தனமான பிரச்சினையா என சார்ல்ஸ் எம்.பி சபாநாயகரை பார்த்து கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தில் வடக்கின் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான வீட்டுத்திட்டம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பிய  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் எம்.பி கேள்வி எழுப்பினார். சில கேள்விகளுக்கு பிரதமர் பதில் தெரிவிக்காது மழுப்பிய வேளையில் இடை நடுவே குறுக்கிட்ட சபாநாயகர், " பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் இடத்தில் கேள்வி எழுப்பும் வேளையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை கேளுங்கள், சில்லறைத்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம், எனவே சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பி இனிமேல் இதனை கருத்தில் கொள்ளுங்கள்" என்றார்

இதன்போது சபாநாயகரின் கருத்தை எதிர்த்த சார்ல்ஸ் எம்.பி " வடக்கின் 6600 குடும்பங்களின் வீட்டுப்பிரச்சினை உங்களுக்கு சில்லறைத்தனமானதாகவா உள்ளது. இது ஆறாயிரம் குடும்பங்கள் சார்ந்த பிரச்சினை, இது சில்லறைத்தனமான பிரச்சினை இல்லை' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53