(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )
பிரதமரிடம் கேள்வி கேற்கும் வேளைகளில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை கேளுங்கள், மாறாக சில்லறைத்தனமான கேள்விகளை கேற்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலனாதனை பார்த்து சபாநாயகர் தெரிவித்தார். வடக்கின் 6600 குடும்பங்ககளுக்கான பிரச்சினை உங்களுக்கு சில்லறைத்தனமான பிரச்சினையா என சார்ல்ஸ் எம்.பி சபாநாயகரை பார்த்து கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தில் வடக்கின் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான வீட்டுத்திட்டம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் எம்.பி கேள்வி எழுப்பினார். சில கேள்விகளுக்கு பிரதமர் பதில் தெரிவிக்காது மழுப்பிய வேளையில் இடை நடுவே குறுக்கிட்ட சபாநாயகர், " பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் இடத்தில் கேள்வி எழுப்பும் வேளையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை கேளுங்கள், சில்லறைத்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம், எனவே சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பி இனிமேல் இதனை கருத்தில் கொள்ளுங்கள்" என்றார்
இதன்போது சபாநாயகரின் கருத்தை எதிர்த்த சார்ல்ஸ் எம்.பி " வடக்கின் 6600 குடும்பங்களின் வீட்டுப்பிரச்சினை உங்களுக்கு சில்லறைத்தனமானதாகவா உள்ளது. இது ஆறாயிரம் குடும்பங்கள் சார்ந்த பிரச்சினை, இது சில்லறைத்தனமான பிரச்சினை இல்லை' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM