வவுனியா கண்டி வீதியிலுள்ள பேயாடிகூழாங்குளம் இராணுவ முகாமிற்கு முன்பாக உள்ள மரம் ஒன்று இன்று (07) பிற்பகல் முறிந்து அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மிது வீழ்ந்ததில் அவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,
இன்று பிற்பகல் வவுனியா கண்டி வீதி பேயாடிகூழாங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்னாலுள்ள மரம் திடீரென்று முறிந்து வீழ்ந்துள்ளது . இதன்போது அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார் .
இவ்விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு முன்பாக உள்ள இராணுவ முகாமின் படையினர் முறிந்த மரத்தை போக்குவரத்திற்கு இடையூறு இன்றி அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM