கம்பஹா மாவட்டத்தை பூரணமாக முடக்க வேண்டும் -  ஹர்ஷண ராஜகருணா 

Published By: R. Kalaichelvan

07 Oct, 2020 | 04:03 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

கம்பஹா மாவட்டத்துக்கு பூரண ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டு ஐந்து நாட்களாகியும் அரசாங்கம் இதனை ஏன் மேற்கொள்ளாமல் இருக்கின்றது என்ற சந்தேகம் எழுகின்றது என கம்பஹா மாவட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்ததார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட  கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொடை பிரதேசத்தில் ஆடை தொழிற்சாலை பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கடந்த சனிக்கிழமை மாலையே உறுதிப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் இன்று கொரோனா தொற்று உறுத்திப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியிருக்கின்றது.

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா பொலிஸ் பிரதேசத்தின் அனைத்து பிரிவுக்கும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டிருப்பதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக பொலிஸ் நிலையங்களுடன் தொடர்புகொண்டு கேட்டபோது அவ்வாறு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று காலையில்  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பதாக எமக்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால் பியகம போன்ற இன்னும் பல பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவில்லை.  தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டு இன்றுவரை கம்பஹா மாவட்டம் பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுபடுத்தப்படாமல் இருப்பது, இந்த தொற்று மேலும் பரவும் அபாயம் இருக்கின்றது. 

அதனால் அரசாங்கம் கம்பஹா மாவட்டத்துக்கு மாத்திரமாவது ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் அரசாங்கம் அதனை இதுவரை செய்யாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எமக்கு எழுகின்றது என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19