20 ஆவது திருத்த வாக்களிப்பில் மனசாட்சியுடன் செயற்பட ஆளும் தரப்பினருக்கு  வாய்ப்பளிக்க வேண்டும் : இம்தியாஸ் பாகிர் மாகார்

Published By: R. Kalaichelvan

07 Oct, 2020 | 04:00 PM
image

(செ.தேன்மொழி)

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக வாக்களிக்கும் போது , ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அவர்களது மனச்சாட்சியின் படி தீர்மானித்து வாக்களிப்பதற்கான வாய்ப்பை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாகார் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை 20 திருத்த சட்டமூலத்தில் சர்வாதிகார செயற்பாடுகளுக்கான முன்னெடுப்புகள் காணப்படுவதாகவும் , அதனால் மக்கள் பிரதிநிதிகள் அரசியல் மற்றும் கட்சிபேதங்களை பாராது  நாட்டு மக்களின் நலன்கருதி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் மத்தியிலேயே எதிர்ப்பு பேச்சுகள் எழுந்துள்ளன. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ 'சுபீட்சமான எதிர்காலம்' கொள்கைத்திட்டத்தில் , மக்களின் அபிலாசனைகளை நிறைவேற்றும் வகையில் புதியதொரு அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதாகவே தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் எதற்காக அவசரமாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றார்.

இந்த சட்டமூலத்தில் சர்வாதிகார ஆட்சிக்கான முன்னெடுப்புகளே காணப்படுகின்றன. அதில் காணப்படும் சிக்கலான சட்டமூலங்களை மீள்திருத்தம் செய்துள்ளதாக தெரிவித்தாலும் , எந்த சட்டமூலம் மீள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பில் உறுதியான பதிலை அரசாங்கம் வழங்கவில்லை.

தற்போது மக்கள் பிரதிநிதிகள் தீர்மானம் மிக்க ஒரு தருணத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் நாம் எதிர்வரும் எமது தலைமுறையினருக்கு ஜனநாயக ஆட்சியையை ஒப்படைக்க போகின்றோமா ? சர்வாதிகார ஆட்சியை ஒப்படைக்க போகின்றோமா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01