கொழும்பு ரோயல் கோல்ஃப் கிளப் (ஆர்.சி.ஜி.சி) இன்று முதல் மூடப்படும் என்று அதன் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
ரோயல் கோல்ஃப் கிளப்பில் பணிபுரியும் தோட்டக் காரரொருவரின் மகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தோட்டக்காரரின் மகள் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் என்று ரோயல் கோல்ஃப் கிளப் நிர்வாகம் தனது உறுப்பினர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் தோட்டக்காரர் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று அல்லது நாளை பி.சி.ஆர். சோதனைக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள்.
அதேநேரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோல்ஃப் கிளப் இன்று முதல் மூடப்படுவதுடன் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக தோட்டக்காரருடன் தொடர்புகளை வைத்திருந்த தொழிலாளர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனறும் நிர்வாகம் மேலும் கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM