இயக்குநரும், நடிகருமான தருண் கோபி இயக்கத்தில் தயாராகவிருக்கும் படத்திற்கு ‘யானை’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
திமிரு, காளை ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் தருண்கோபி. மறைந்த இயக்குநர் இராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்தவர்.
சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் இயக்கத்தில் யானை என்ற பெயரில் புதிய படமொன்று தயாராகவிருக்கிறது. இப்படத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை படப்புகழ் நடிகர் அண்டனி கதையின் நாயகனாக நடிக்கிறார். இனியன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்தை வி.டி விஜயன் தொகுக்கவிருக்கிறார். ஆரூத் பிலிம் பேக்டரி சார்பில் மன்னங்காடு குமரேசன், எஸ் எஸ் பிரபுராஜா மற்றும் தருண் கோபி குடும்பத்தார் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் தருண் கோபி பேசுகையில்,‘ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது அந்த வீட்டிற்கு மகளாகவும், ஒரு ஆண் தான் பெண் எடுத்த வீட்டிற்கு ஒரு மகனாகவும் இருக்க வேண்டும்.
இதை மையப்படுத்தி, உணர்வுபூர்வமாகவும், ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்து கொமர்சலாக உருவாக்கியிருக்கிறோம். இம்மாத இறுதியில் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் ஒரே கட்டமாக படபிடிப்பு நடைபெறவிருக்கிறது. ’ என்றார் இயக்குனர் தருண்கோபி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM