(எம்.எப்.எம்.பஸீர்)
பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்ப்ட்டுள்ள 39 விஷேட மனுக்கள், அம்மனுக்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 20 இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று நிறைவுக்கு வந்தன.
மனுக்களில் பிரதிவாதியாக பெயரிடப்ப்ட்டுள்ள சட்ட மா அதிபர் சார்பில் உயர் நீதிமன்றில் இன்றும் முன்வைக்கப்பட்ட நீண்ட வாதங்களுடன் மனுக்கள் மீதான பரிசீலனைகள் நிறைவுக்கு வந்தன.
இதனையடுத்து நாளை 6 ஆம் திகதி பி.ப.3.00 மணிக்கு முன்னர் மனுக்கள் தொடர்பிலான அனைத்து எழுத்து மூல சமர்ப்பணங்களையும் மன்றில் சமர்ப்பிக்க அனைத்து தரப்பினருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையிலேயே 20 ஆம் திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றின் தீர்ப்பானது ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்படும் என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய திறந்த மன்றில் அறிவித்தார்.
அரசியலமைப்பின் 121 ஆவது உறுப்புரை பிரகாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த 39 விசேட மனுக்கள் மற்றும் இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனைகள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியர்சர்களான விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியர்சர்கள் குழாம் முன்னிலையிலேயே இன்று நான்காவது நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM