களனி குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிராம் 680 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பானது வத்தளை - பிரீதிபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது. வேபட பகுதியைச் சேர்ந்த 50 வயதான நபரே இவ்வாறு iகுது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹமாயாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவுர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. திருகோணமலை - மரத்தடி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குச்சவெளி - சுனாமி கிராமப்புறம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 6 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான நபரொருவர் iகுது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM