ராகுலின் மீண்டுமொர் அசத்தலான துடுப்பாட்டம் காரணமாக பஞ்சாப் அணி சென்னைக்கு எதிரான போட்டியில் 178 ஓட்டங்களை வித்துள்ளது.
13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 18 ஆவது போட்டி இன்றைய தினம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றம் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.
துபாயில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் துடுப்பெடுத்தாவடுவதற்கு தீர்மானித்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மாயங்க் அகர்வால் மற்றும் ராகுல் ஜோடி சேர்ந்தாட பஞ்சாப் அணி 5 ஓவர்கள் நிறைவில் 38 ஓட்டங்களையும், 8 ஓவர்கள் நிறைவில் 61 ஓட்டங்களையும் விக்கெட் இழப்பின்றி பெற்றது.
எனினும் ஒன்பதாவது ஓவரின் முதல் பந்தில் பஞ்சாப் அணியின் முதல் விக்கெட் தகர்க்கப்பட்டது.
அதன்படி மயங்க் அகர்வால் 26 ஓட்டங்களுடன் சாவ்லாவின் பந்து வீச்சில் சாம் கரனிடம் பிடிகொடுத்து வெளியேற, அடுத்து வந்த மன்டீப் சிங் சற்று நேரம் தாக்குப் பிடித்து துடுப்பாடினார்.
இருந்தபோதும் அவர் 12 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஜடேஜாவின் பந்து வீச்சில் ராயுடுவிடம் பிடிகொடுத்து 27 ஓட்டங்ககளுடன் ஆட்டமிழந்தார்.
இதனால் பஞ்சாப் அணியின் இரண்டாவது விக்கெட் 94 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.
3 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய நிகோலஷ் பூரணுடன் ராகுல் ஜோடி சேர்ந்தாட பஞ்சாப் அணி 13 ஓவர்கள் நிறைவில் 100 ஓட்டங்களையும் 17 ஓவர்களின் நிறைவில் 150 ஓட்டங்களையும் கடந்தது.
இந் நிலையில் 18 ஆவது ஓவரின் முதல் பந்தில் நிகோலஷ் பூரண் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ராகுலும் அதே ஓவரின் அடுத்த பந்து வீச்சில் மொத்தமாக 52 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களுடன் சார்துல் தாகூரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக மெக்ஸ்வெல் மற்றும் சப்ராஸ் கான் ஜோர் சேர்ந்தாட பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை குவித்தது.
மெக்ஸ்வெல் 11 ஓட்டங்களுடனும், சப்ராஸ் கான் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM