19 ஆவது திருத்தம் அல்லது 19 பிளஸ் திருத்தத்திற்கு மலையக மக்களின் பிரதநிதி என்ற வகையில் ஆதரவளிக்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் வைத்து இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
"19 ஆவது திருத்தம் அல்லது 19 பிளஸ் திருத்தத்தை ஆதரிக்க தயார். அதுவே எனது நிலைப்பாடு. இருபதாவது திருத்தத்தில் என்ன உள்ளது. மலையக மக்களுக்கு காணி உரிமையும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதாகவும் அதேபோல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணைக்கையை அதிகரிப்பதாகவும் கூறினால். இரு கரங்களை உயர்த்தி இருபதை ஆதரிக்க தயார். ஆனால் உப்புச் சப்பு இல்லாத தெளிவாக சொன்னால் தாய், தந்தை இல்லாத இருபதை ஆதரிக்க தயாரில்லை. தமிழ் மக்குகளால் பாராளுமன்றம் சென்ற எவரும் 20 வாசித்து புரிந்திருந்தால் அதனை ஆதரிக்கமாட்டார்கள்."
இதன்போது தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் மூபா சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் அவரிடம் ஊடகியலாளர்கள் வினவினர்.
இதற்கு பதிலளித்த அவர்.
"இது தொடர்பில் தீர்மானிக்க முதலாளிமார் சம்மேளனத்திற்கு தொழில் அமைச்சர் இரண்டு வாரகால அவகாசத்தை வழங்கியுள்ளார். அது தொடர்பில் முடிவெடுக்க வழங்கப்பட்ட இருவாரத்தில் 4 நாட்கள் முடிவடைந்துள்ளது. இன்னும் 10 நாட்கள் உள்ளன. எனவே அவர்களின் பதிலுக்காக காத்திருக்கின்றோம். இது தொடர்பில் செயலாற்ற அரசாங்கத்திற்கும் எதிர்க் கட்சி என்றவகையில் எமக்கும் ஒரு தார்மீக பொறுப்பு உள்ளது.
ஆகவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவுக்கும் மேல் வழங்க வேண்டும். முதலாளிமார் சம்மேளனம் மனிதாபிமாகமாக நடந்துக்கொள்ள வேண்டும். ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க எவர் முன் வந்தாலும் அதனை ஆதரிக்க தயார். இன்னும் 10 நாளில் சாதகமான பதில் கிடைக்காவிடின் பாரிய ஒத்துழையாமை போராட்டத்தை நடத்த தயார்"
இதேவேளை சுத்தமானவர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக்கொள்வதில் தவறில்லை எனவும் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டால் அதற்கு எதிராக செயற்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM