மீண்டும் அதே தறுகளை செய்வதால் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைய நேர்ந்ததாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவரான மஹேந்திர சிங் தோனி கவலை தெரிவித்துள்ளார்.
துபாயில் நேற்று நடைபெற்ற 14 ஆவது லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்று 7 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
சென்னை அணி தொடர்ந்து 3 ஆவது தோல்வியை தழுவியது. ஆரம்பப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது.
2 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸிடம் 16 ஓட்டங்களிலும், 3 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியிடம் 44 ஓட்டங்களிலும் தோல்வியடைந்திருந்தது.
ஐதராபாத் அணியிடம் அடைந்த தோல்வி குறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் தோனி கூறியுள்ளதாவது,
“என்னால் நிறைய பந்துகளை சரியாக துடுப்பெடுத்தாட முடியவில்லை. பந்தை அடித்து ஆட வேண்டும் என்ற முடிவினால் இப்படி ஆகியிருக்கலாம்.
ஆடுகளம் மந்தமாக இருக்கும்போது பந்தை நேரம் எடுத்துக் கொண்டு ஆடுவதுதான் சிறந்தது.
நாங்கள் நிறைய விடயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது. பிடிகளை தவறு விடுவது, முறையற்ற பந்து (நோ போல்) வீசுவது ஆகியவை நல்லது அல்ல. இவையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்தக் கூடியவைதான்.
நாங்கள் அதே தவறை மீண்டும் செய்துள்ளோம். 16 ஆவது ஓவருக்கு பிறகு 2 ஓவர் மோசமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக போட்டியில் இன்னும் மேம்பட வேண்டும்.
மேலும், இங்குள்ள வெப்பநிலைக்கு எனக்கு தொண்டை வறண்டு விடுகிறது. இதனால் இருமல் வருகிறது.
இவை அறிகுறியாக இருக்கும்போது, நாம் நேரம் எடுத்துகொண்டு ஆடுவது நல்லதுதான். மற்றபடி நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.
ஐதராபாத் அணி 2 ஆவது வெற்றியை பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணித்தலைவர் டேவிட் வோர்னர் கூறும்போது, “இந்த ஆடுகளத்தில் 150 ஓட்டங்களுக்கு மேல் எடுப்பது சிறந்த ஓட்ட எண்ணிக்கையாகும். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டனர். ஆனால் இது ஒரு மோசமான ஆடுகளம்” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM