மதுபானம் அருந்திவிட்டு தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்டவர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

04 Oct, 2020 | 05:30 PM
image

திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபானம் குடித்து விட்டு தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வெருகல், மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய எம்.தவராசா என்பவரே இவ்வாறு தனக்குத் தானே தீ வைத்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (3) மாலை இடம்பெற்றுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:

குறித்த நபர் தினமும் மதுபானம் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்று மனைவி பிள்ளைகளுடன் சண்டையிடுவதாகவும்,மனைவி வேறு நபருடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறியே சண்டையிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

சம்பவதினம் அதிகமாக குடித்துவிட்டு மனைவியைத் தாக்கியதோடு வீட்டில் உள்ள மண்ணெண்னை போத்தலை எடுத்து தலையில் ஊற்றி தனது மனைவி பிள்ளைகள் முன்னிலையில் தீ வைத்துக்கொண்டு கதறிய நிலையிலே அயல் வீட்டார்கள் இணைந்து தீயினை அனைத்து மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04