துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர்.இந்த இராணுவ புரட்சியை பொதுமக்கள் வெற்றிகரமாக முறியடித்தனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1,500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இராணுவ புரட்சியில் ஈடுபட்ட 6,000 போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், பொலிஸாருக்கும், இராணுவீரர்களுக்கும் நடைபெற்ற சண்டையில் தோற்கடிக்கப்பட்ட இராணுவீரர்களை, துருக்கி குடிமகன்கள் அடித்து உதைக்கும் புகைப்படங்கள் மற்றும் இராணுவவீரர்களின் ஆடைகள் களையப்பட்டு, அவர்களின் கைகள் கட்டப்பட்டு சிர்னெகில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் படுக்கவைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது குறித்து பாராளுமன்றத்தில் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் கூறியுள்ளார். இதில் உயிரிழந்த மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டபோது, அவரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
மேலும், துருக்கி நாடு ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என தான் ஆசைப்படுவதாகவும், இந்த இராணுவ புரட்சிக்கு பின்னணியில் நிச்சயம் பெதுல்லாவே காரணமாக இருக்கிறார் என்பது எனக்கு தெளிவாக தெரியும் என கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM