வீட்டில் படையெடுக்கும் எறுபுகளை விரட்டுவதற்கு பலவிதமான யோசனைகளை நாம் தேடிக்கொண்டு இருக்கும் நிலையில் சிங்கப்பூரில் எறும்புகள் செல்லபிராணிகளாக விற்பனை செய்யப்படுகின்றன.
சிங்கப்பூரின் ஒரு சந்தை தொகுதியில் உள்ள கடைக்கு வெளியே எறும்புகள் நிறைந்த பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள.
இது எறும்புகளை செல்லப்பிராணிகளாக விற்பனை செய்யும் கடை, பலரும் இதனை பரிசு பொருளாக தமது நண்பர்களுக்கு வழங்குவதற்கு வாங்கிச்செல்கின்றனர் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இங்கு சுமார் 30 முதல் 40 எறும்பு- இனங்கள், காணப்படுகின்றன. இவ் எறும்புகள் சிறப்பு குழுவினரால் சிங்கப்பூரைச் சுற்றி பல இடங்களில் சேகரிக்கப்படுகின்றன. இவ் உயிரினங்களைப் பிடிப்பது எளிதான காரியமல்ல என, குறித்த கடையின் விற்பனையாளர் தெரிவிக்கின்றார்.
எறும்புகளைப் பிடிப்பதற்கான மினி கையடக்க வெற்றிடங்கள், சிறிய உணவுகள் மற்றும் இறையாகப் பயன்படுத்தப்படும் உணவுப் புழுக்கள் உள்ளிட்ட சிறப்பு உபகரணங்களுடன் எறும்பு பண்ணைகளுக்கு தேவையான அனைத்தையும் இந்த கடை விற்பனை செய்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்ட இவ் விற்பனை நிலையம் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது. இதேவேளை, இங்கு வணிகம் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும், பெரும்பாலான சிங்கப்பூரர் வாசிகள் உண்மையில் எறும்புகளை வைத்திருக்கக்கூடாது, ஏனெனில், எறும்புகள் விஷம் மட்டுமன்றி அவை அழுக்கு, அருவருப்பானவை, நோய்களைச் சுமக்கின்றன" என்றும் ஒப்புக்கொள்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM