வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெலிஅத்த - கிரிந்த வீதி, 4 ஆம் கட்டை பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் சாரதி அதன் கதவை திறந்து வெளியேற முற்பட்ட போது கிரிந்த நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று குறித்த லொறியின் கதவின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் பெலிஅத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தங்கல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மஹஹீல்ல - பெலிஅத்த பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்துக்குக் காரணமான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி - யாழ்ப்பாணம் வீதி, ரணவிரு கிராமத்திற்கு திரும்பும் பகுதியில் மதவாச்சி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் புரண்டு எதிர்த்திசையில் வந்த காருடன் மோதியதால் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழந்துள்ளார்.
டெலிகொம் வீதி - மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 24 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி - கொழும்பு வீதி, தடல்ல பொது மயானத்திற்கு அருகில் கொழும்பு நோக்கி பயணித்த காரொன்று வீதியின் குறுக்கே சென்ற பாதசாரியொருவரின் மீது மோதியதில் காயமடைந்த பாதசாரி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புத்தம - மொனராகலை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்துக்குக் காரணமான காரின் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM