74 வயதான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து வெள்ளியன்று வால்டர் ரீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், 'நான் ஸ்டான் சேராவைப் போல வெளியே செல்கிறேனா? நானா? ' டிரம்ப் கேட்டார் என்று வேனிட்டி ஃபேர் நிருபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் நீண்டகால நண்பரும் ஆதரவாளருமான சேரா நியூயார்க் நகரில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் இறந்தார் இதன் காரணமாக தானும் இறந்து விடுவேனா என்ற சந்தேகம் ட்ரம்புக்கு எழுந்துள்ளது.
இதேவேளை, டிரம்ப் தமது நிலைகுறித்த டுவிட்டர் பக்கத்தில் “நான் நன்றாக இருப்பதை உணர ஆரம்பிக்கிறேன்': அடுத்த இரண்டு நாட்கள் முக்கியமானவை என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன் கொரோனா பரிசோதனை மருந்துகள் 'கடவுளிடமிருந்து வரும் அற்புதங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் வைத்தியர் சீன் கான்லி சனிக்கிழமை காலை "ஜனாதிபதி உடல் நிலை முன்னேற்றத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்று ட்ரம்ப் குறித்த தெரிவித்தள்ளார்.
அத்துடன் ட்ரம்ப்க்கு கடந்த 24 மணி நேரத்தில் காய்ச்சல் இல்லை எனவும், சுவாசிப்பதில் அல்லது ஆக்ஸிஜனைப் பயன்படுத்துவதில் சிக்கல் இல்லை என்றும் கான்லி கூறியுள்ளார்.
'ஏராளமான எச்சரிக்கையுடன்' சோதனைகளுக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இவருக்கு எபோலா மருந்து, ரெமெடிசிவிர் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ட்ரம்ப், தமது உடல் நிலைக்குறித்து இன்று காலை வெளியிட்டுள்ள நான்கு நிமிட ட்விட்டர் வீடியோ பதிவில்,
நாங்கள் இருவரும் சிறப்பாக செயல்படுகிறோம் ' 'மெலனியா உண்மையில் அதை மிக நேர்த்தியாக கையாளுகிறார். நீங்கள் படித்திருப்பதைப் போல, அவள் என்னை விட சற்றே இளையவள், கொஞ்சம் சிறியவள், 'என்று அவர் தனது 50 வயது மனைவியைப் பற்றி கூறினார்.
- டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி
- டொனால்ட் ட்ரம்ப் வைத்தியசாலையில் அனுமதி
- ட்ரம்பும், அவரது மனைவியும் விரைவில் குணமடைவார்கள் - கிம் நம்பிக்கை
'எனவே, இந்த நோயை நாங்கள் அறிவோம், வயதுக்குட்பட்ட இளையோருடனான நிலைமையை நாங்கள் அறிவோம், மெலனியா அதைக் கையாள வேண்டியது போல புள்ளிவிவர ரீதியாக அதைக் கையாளுகிறது, அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது, மேலும் இது நாட்டை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது, ஆனால் நானும் நன்றாகச் செய்கிறேன், நாங்கள் மீண்டும் ஒரு நல்ல முடிவைப் பெறுவோம் என்று நினைக்கிறேன். ' என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM