மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காந்தி நினைவு தூபியில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் போது இந்திய துணைத் தூதுவர் கே. பாலசந்திரன், மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அரசியல் பிரமுகர்கள் கல்விமான்கள் மதத் தலைவர்கள் என பலரும் மலர் மாலை அணிவித்து மலரஞ்ஞலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்ளான மாவை சேனாதிராஜா சுரேஸ் பிரேமசந்திரன், சரவணபவன், சிவாஜிலிங்கம், மாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம், முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், எதிர்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளர் உமாசந்திரா பிரகாஷ், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்குணராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது காந்திய வழியை பின்பற்றியதாக மாணவி ஒருவரை கௌரவித்து துணைதூதுவரால் பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM