மாகாணசபை தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும், இந்தியா அல்ல - சரத் வீரசேகர

Published By: Vishnu

01 Oct, 2020 | 08:26 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மாகாணசபை முறைமை நாட்டில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டுமா இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்கவேண்டும் என  உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

எமது நாட்டின் மாகாண சபைகளை தொடர்ந்து கொண்டுசெல்வதா இல்லையா என்பது எமது நாட்டின் உள்விவகாரமாகும். அதுதொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டி இருப்பது எமது நாட்டின் ஜனாதிபதியாகும். 

அவ்வாறு இல்லாமல் வெளிநாடுகளின் பிரதமர்கள் அல்ல. மாகாணசபைகளை தொடர்ந்து கொண்டு செல்லவேண்டும் என இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.

இலங்கை சுயாதீன, இறையாண்மையுள்ள நாடு. அதனால் எமக்கு அழுத்தம் கொடுக்க இந்தியாவுக்கு முடியாது. 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமே 13 ஆம் திருத்தம் எமது அரசியலமைப்புக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை மாகாணசபை முறையை தொடர்ந்து கொண்டுசெல்லவேண்டும் என்றே இந்திய தரப்பினரால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியாவினால்  மேற்கொள்ளவேண்டிய பல நிபந்தனைகள் இருந்தன. அதில் ஒன்றுதான் விடுதலை புலிகளை நிராயுதபாணிகளாக்குவதாகும். ஆனால் இறுதிவரை புலி பயங்கரவாதிகள் நிராயுத பாணியாகவில்லை. இந்தியாவுக்கும் அதனை மேற்கொள்ள முடியவில்லை. அதனடிப்படையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் எந்தளவுக்கு பாதிக்கின்றது என்பதில் கேள்வி எழும் என்றும் கூறினார்.

அவிசாவலை பாதுக்கை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32