20 குறித்த சர்ச்சைகளுக்கு  பாராளுமன்றம் ஊடாக தீர்வு  : ரொஷான்  ரணசிங்க  

Published By: R. Kalaichelvan

30 Sep, 2020 | 03:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியமைப்பின்  20 ஆவது திருத்தத்தினால் அரசாங்கத்துக்கும்,  ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் தோற்றம்பெறாது.  வர்த்தமானியில் வெளியாகியுள்ள  அரசியலமைப்பின்  20  ஆவது திருத்தினால்  ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு  பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு பெற்றுக் கொள்ளப்படும் என  காணி விவகார இராஜாங்கஅமைச்சர் ரொஷான் ரணசிங்க  தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியபமைப்பின் 20 ஆவது திருத்தம்  குறித்து உயர்நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்டுள்ள மனுக்கல்  தொடர்பில்  உயர்நீதிமன்றம்  பரிசீலனை செய்து வருகிறது.

மக்கள் உண்மை தன்மைகளை தெரிந்துக் கொள்ள வேண்டும்.  வர்த்தமானியில் வெளியாக  திருத்தம் தொடர்பில்  உயர்நீதிமன்றம்   வழங்கும் ஆலோசனைகளை முழுமையாக  ஏற்றுக் கொள்வோம்.

அரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்தை கொண்டு  எதிர் தரப்பினர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகளை  தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி, பிரதமருக்கு இடையில்  ஏற்பட்ட  அதிகார ரீதியான முரண்பாடுகள்  தற்போதைய அரசாங்கத்தில் ஒருபோதும் ஏற்படாது.

20  ஆவது திருத்ததில்  காணப்படும் ஒரு சில  குறைப்பாடுகள்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அக்குறைகள் பாராளுமன்றகுழு ஊடாக   பரிசீலனை செய்யப்படும்.

சர்வாதிகாரமான அரச நிர்வாக்தை செயற்படுத்த வேண்டிய தேவை   ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் கிடையாது.  நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள்.

ஆட்சியாளர்கள் மக்களின் ஆணையை  தவறாக  செயற்படுத்தும் போது மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள்.கடந்த அரசாங்கம் தான் தோன்றித்தனமாக செயற்பட்டதால் மக்களால் புறக்கணிக்கப்பட்டது.  அரசாங்கமும்  மக்களாணையினை தவறான  பயன்படுத்தினால் மக்களால்  வெறுக்கப்படும். ஆகவே  மக்களுக்காகவே சிறந்த முறையில் செயல்படுவோம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26